Homeசெய்திகள்கட்டுரைஇடைத்தேர்தல் முடிவு சீமானுக்கு வெற்றிகரமான தோல்விதான்... பத்திரிகையாளர் ராம்கி நேர்காணல்!

இடைத்தேர்தல் முடிவு சீமானுக்கு வெற்றிகரமான தோல்விதான்… பத்திரிகையாளர் ராம்கி நேர்காணல்!

-

- Advertisement -

தேர்தல் அரசியலில் சீமான் தோற்று போகலாம், ஆனால் கட்சி அரசியலில் தொடர்ந்து இருக்கிறார். அதனால் இடைத் தேர்தல் முடிவு சீமானுக்கு வெற்றிகரமான தோல்விதான் என்று பத்திரிகையாளர் ராம்கி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து பத்திரிகையாளர் ராம்கி, யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் வாங்கவில்லை என கூறுகிறார்கள். பெரியாரை விமர்சித்து பேசிய சீமானுக்கு, பெரியாரை எதிர்ப்பவர்கள் ஆதரவாக வாக்களித்திருக்க மாட்டார்களா என்றும் கேள்வி எழுகிறது. ஆனால் அப்படி ஒரு தளம் அங்கு கிடையாது. பெரியாரின் சொந்த ஊரில் சென்று அவரை விமர்சித்தால் கடுமையான பின்விளைவுகள் வரும் என  தெரிந்து கொண்டுதான் சீமான் பேசுகிறார். பெரியார் மீது விமர்சனங்களை முன்வைத்து சீமான் பிரச்சாரம் செய்வதன் நோக்கம் என்பது இடைத் தேர்தலில் வெற்றி பெறுவது அல்ல. தனக்கான அடுத்த 10 ஆண்டுகளுக்கு அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காக தான். எல்லாம் ஒரு கவன ஈர்ப்புக்காக செய்யப்பட்ட விஷயம்தான். தேர்தலுக்காக செய்வதாக இருந்தால் வேறு பாதை எடுத்திருப்பார்.

இது பெரியார் மீதான விஷயம் மட்டும் அல்ல. திமுக, பாஜக போன்ற கட்சிகள் எழுப்ப முடியாத கேள்விகளை எழுப்பினார். மற்ற கட்சிகள் அதிகாரத்தை நோக்கி பயணிக்கும் போது அவர்களால் கேள்வி எழுப்ப முடியாது. சீமான் இந்த கேள்வியை எழுப்புகிறார். சீமானும் ஆட்சி அதிகாரத்தை நோக்கி செல்லவில்லையா என கேள்வி எழலாம். ஆனால் ஆட்சி அதிகாரத்தை நோக்கி செல்வதற்கு எவ்வளவு தூரம் செல்ல வேண்டிய பயணம் என்றும் அவருக்கே தெரியும். கல்வி, மருத்துவத்திற்கு நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது. அனைத்து மாநிலங்களும் இலசவங்களை வாரி வழங்கும் போது அதை கேள்வி எழுப்பும் இடத்தில் நாம் தமிழர், ஆம் ஆத்மி கட்சி உள்ளது. இன்று இரண்டு கட்சிகளும் பின்னடைவை சந்தித்துள்ளன. ஆனால் இதனை தாண்டி அவர்களுடைய இருப்பு என்பது உள்ளது. தேர்தல் அரசியலில் அவர்கள் தோற்று போகலாம். கட்சி அரசியலில் தொடர்ந்து இருக்கிறார். அப்படி என்றால் இடைத் தேர்தல் முடிவு சீமானுக்கு வெற்றிகரமான தோல்விதான். தமிழ்நாட்டில் சீமான் என்பவர் தவிர்க்க முடியாதவர் என்பது நிருபிக்க இடைத்தேர்தல் உதவியுள்ளது. சீமான் எந்த தேர்தலிலும் டெபாசிட் வாங்கியது இல்லை. மேலும் அதிமுக, பாஜக வாக்குகள் வரும் என்று சொன்னார்கள் ஆனால் அப்படி வரவில்லை. சீமானுக்கு எதிராக பல பேர் இறங்கி வேலை செய்தார்கள். இந்த தேர்தலே சீமானுக்கு எதிரான  போக்குதான் காணப்பட்டது.

தந்தை பெரியார்

ஈரோட்டில் பெரியார் குறித்த கருத்துக்களை எடுத்ததால்தான் எதிர்ப்புகள் வந்தன. ஆனால் சீமானின் கேள்விக்கு திமுகவோ, திராவிடர் கழகமோ பதில் அளிக்க வில்லை. பெரியார் உணர்வாளர்களும் நேர்மையாக எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கு சீமான் ஆதாரங்கள் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளதால் நான் ஆதாரங்களை அங்கு வழங்குகிறேன் என சொல்கிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வாங்கியுள்ள வாக்குகள் என்பது நாம் தமிழர் கட்சியை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள உதவும். இது 2026 சட்டமன்ற தேர்தலில் அவருக்கு என்று ஒரு இடம் இருப்பதை உறுதி செய்துள்ளது. மற்றபடி இதில் ஏதும் இல்லை.

பெரியார் குறித்த சீமான் கருத்தை ஏற்கிறோம். ஆனால் அவர் மிகவும் ஆபாசமாக பேசிவிட்டார் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லியுள்ளார். அப்போது பெரியார் எதிர்ப்பில் எங்களுக்கு உடன்பாடு உள்ளது. ஆனால் எங்களுக்கு என்று சில அடையாளம் உள்ளது என்று இதுபோன்ற விமர்சனங்களை அண்ணாமலை கூறியுள்ளார். சீமான் களத்தில் நின்று வேலை செய்கிறார். வேறு எந்த கட்சியும் களத்திற்கு செல்லவில்லை. பாஜகவோ ஏகப்பட்ட திட்டமிடல் உடன்தான் போய் சேர்கிறார். அவர்கள் ஒரு கூட்டணிக்குள் இருப்பார்கள். ஆனால் அவர்களால் தலைமை ஏற்று நடத்த முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ