spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரோடு ஒன்றிணைந்து பயணிப்போம் : ஓ.பன்னீர்செல்வம்

சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரோடு ஒன்றிணைந்து பயணிப்போம் : ஓ.பன்னீர்செல்வம்

-

- Advertisement -

சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரோடு ஒன்றிணைந்து பயணிப்போம் : ஓ.பன்னீர்செல்வம்

வரும் 24ம் தேதி நடக்கவுள்ள திருச்சி மாநாடு குறித்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “ சட்டப்படி எங்கள்பக்கம்தான் நியாயம் இருக்கிறது. மக்களை சந்தித்து நாங்கள்தான் உண்மையான அதிமுக என நிரூபிப்போம். கட்சியின் சட்டவிதியை சர்வாதிகார கும்பல் அபகரிப்பு செய்வதை அழிக்கிற மாநாடாக இந்த மாநாடு அமையும். எம்.ஞி.ஆர். தொண்டர்களுக்கு அளித்த உரிமை மீட்டெடுக்கப்படும். சட்டப்போராட்டத்தில் உறுதியாக ஒன்றரை கோடி தொண்டர்கள் வெற்றி பெறுவார்கள்.

we-r-hiring

எம்.ஜி.ஆர் காலம் முதல் ஜெயலலிதா காலம் வரை கட்சியின் வளர்ச்சிக்காக பணியாற்றியவர்கள் அனைவரும் இருங்கிணைந்து இந்த இயக்கத்தை நடத்துவோம். சசிகலா , டிடிவி தினகரன் ஆகியோரோடு ஒன்றிணைந்து பயணிப்போம். கர்நாடக தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னத்தை கேட்போம். நாம் மீண்டும் தொடங்கிய தர்மயுத்தம் எந்தவித பிசிறும் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. தமிழ்நாடு மக்களும் நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இறுதியில் நாம் தான் வெற்றியடைய போகிறோம்” என்றார்.

MUST READ