‘காந்தா’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் துல்கர் சல்மான். இவர் ‘சீதாராமம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த பான் இந்திய படங்களில் நடித்து பெயரையும், புகழையும் பெற்று வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்தது வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காந்தா’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. 
இந்த படத்தை வேப்பரர் ஃபிலிம்ஸ் நிறுவனமும், ஸ்பிரிட் மீடியா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. செல்வமணி செல்வராஜ் இந்த படத்தை இயக்க ஜானு சந்தர் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படமானது தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ போர்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 
இந்நிலையில் படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, இன்று (நவம்பர் 4) மாலை 4 மணி அளவில் முதல் தீப்பொறி வெளியாகும் என படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் இந்த அப்டேட் ட்ரைலர் குறித்த அப்டேட்டாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


