Homeசெய்திகள்தமிழ்நாடுசுதந்திர தின அணிவகுப்பில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஜோசப் விஜய்...

சுதந்திர தின அணிவகுப்பில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு!

-

- Advertisement -

சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயக்கமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

ஜோசப் விஜய்

we-r-hiring

அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“சென்னை, ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப்பயிற்சி மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் ஏ.தர்மராஜ் (வயது 56) நேற்று (15.08.2026) புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது திடீரென மயங்கி விழுந்தார்.

சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு

முதல்நிலைக் காவலர் ஏ.தர்மராஜின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

ஏ.தர்மராஜை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கழுத்தை நெரிக்கும் அரசியல் மாயைகள்! – மருது அழகராஜ் பேட்டியால் வெடித்த அரசியல் புயல்!

MUST READ