நடிகர் துல்கர் சல்மான் மீண்டும் ஒருமுறை தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ளார்.
துல்கர் சல்மான் தற்போது பான் இந்தியா நடிகராக உருவெடுத்துள்ளார். அவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருகின்றன. கடைசியாக துல்கர் நடிப்பில் வெளியான சீதாராமன் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘வாத்தி’ திரைப்படத்தை இயக்கிய வெங்கி அட்லூரியின் அடுத்த படத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது வெங்கி, துல்கர் உடன் கூட்டணி அமைத்துள்ளார். துல்கர் மற்றும் வெங்கி இருவரும் இணைந்து காணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படம் 2024 கோடை காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.