பதக்கங்களை கங்கையில் வீசுவோம்- மல்யுத்த வீரர்கள்
ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கையில் வீசுவோம் என மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டில் உரியச் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் ஒரு மாதமாக டெல்லியில் வீதியில் இறங்கி போராடிவருகின்றனர். இரு தினங்களுக்கு முன் புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவின்போது பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அதில், மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பதக்கங்களை கங்கை நதியில் வீசிவிடுவோம். தங்கம் பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் மாலை 6 மணிக்கு வீசவுள்ளோம். அதுமட்டுமின்றி, டெல்லி இந்தியா கேட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். எனக் குறிப்பிட்டுள்ளனர்.