spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா20 ஆண்டுகளுக்கு பின்னர் நாயகியாக நடிக்கும் நடிகை ரேகா 

20 ஆண்டுகளுக்கு பின்னர் நாயகியாக நடிக்கும் நடிகை ரேகா 

-

- Advertisement -

20 ஆண்டுகளுக்கு பின்னர் நாயகியாக நடிக்கும் நடிகை ரேகா

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘மிரியம்மா’. இப்படத்தில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் இந்த படத்தில் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

we-r-hiring

இப்படத்திற்கு ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இப்படத்திற்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். இப்படம் பெண்களை மையமாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் நிறுவனம் சார்பில் இயக்குனரான மாலதி நாராயண் தயாரிக்கிறார்.
20 ஆண்டுகளுக்கு பின்னர் நாயகியாக நடிக்கும் நடிகை ரேகா மேலும், நடிகை ரேகா திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக அழுத்தமான அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதால், ‘மிரியம்மா‘ படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

MUST READ