- Advertisement -
நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடித்த ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவானது. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகை த்ரிஷா வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகிலும் சரி, தமிழ் ரசிகர்களுக்கும் சரி அன்று முதல் இன்று வரை கனவுக்கன்னியாக மனதில் நிலைத்திருப்பவர் த்ரிஷா. சினிமாவில் நடிகர்கள் எத்தனை வயது ஆனாலும் கதநாயாகவே வலம் வரலாம், ஆனால் நடிகைகளுக்கு அப்படி இல்லை என்ற வசனத்தை தகர்த்தெறிந்து கோலிவுட் எனும் கோட்டையில் கொடியை பறக்கவிட்ட புகழ் த்ரிஷாவுக்கு சேரும். 70 வயதாகியும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் 40 வயதில் நாயகியாக நடிப்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால், அந்த அசாதாரணத்தையும் சாத்தியமாக்கியது த்ரிஷா தான்.
த்ரிஷா கதாநாயகியாக நடித்து முதல் முதலில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் திரைக்கு வந்து இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவு அடைகிறது. மாடலிங், டிவி தொகுப்பாளர், ரிச் கேர்ள் என வந்து லேசா லேசா படத்தில் நாயகியாக நடிக்க முதலில் வாய்ப்பு வந்தது. அந்த படம் வெளியாக தாமதமான கால கட்டத்தில் அமீர் இயக்கிய முதல் படமான மௌனம் பேசியதே திரைப்படம் முதலில் வெளியானது. இந்த இரு படங்களுமே த்ரிஷாக்கு நல்ல அடிவாரமாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து விக்ரமுக்கு ஜோடியாக சாமி படத்தில் நடித்த த்ரிஷா முன்னணி நடிகையாக குறுகிய காலத்திலேயே முன்னேறினார். பின் தெலுங்கு பக்கம் திரும்பிய த்ரிஷா அங்கும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக மட்டுமே நடித்து வந்த அவர், கொடி திரைப்படத்தில் முதல்முதலாக வில்லி வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், நாயகியாக த்ரிஷாவை கொண்டாடிய ரசிகர்கள் வில்லியாகவும் அவரை கொண்டாட தவறவில்லை. இடையே ஏற்பட்ட தொய்வை, 96 படத்தில் மீண்டும் இழுத்துப்பிடித்தார் த்ரிஷா.
🤲🏻❤️🧿
And just like that…..#21years pic.twitter.com/TNDrdpGiZL— Trish (@trishtrashers) December 13, 2023