spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபிரான்ஸ் அதிபருக்கு மசாலா டீ வாங்கிக் கொடுத்து உபசரித்த பிரதமர் நரேந்திர மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு மசாலா டீ வாங்கிக் கொடுத்து உபசரித்த பிரதமர் நரேந்திர மோடி!

-

- Advertisement -

 

பிரான்ஸ் அதிபருக்கு மசாலா டீ வாங்கிக் கொடுத்து உபசரித்த பிரதமர் நரேந்திர மோடி!
Photo: PM Narendra Modi

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

we-r-hiring

கருடன் படத்தின் டப்பிங் தொடக்கம்… கையில் கட்டுடன் பேசும் சூரி…

இந்தியாவின் 75- வது குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது அதனையேற்று, பிரான்ஸ் அதிபர் இந்தியா வந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை வந்திறங்கிய அவரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் வரவேற்றார்.

பின்னர் அம்பர் கோட்டையை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேரில் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பிரான்ஸ் அதிபர் நேரில் சந்தித்துப் பேசினார். இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்டவைக் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் இரு நாட்டு தலைவர்களும் திறந்த காரில் பேரணியாகச் சென்றனர். ஹவா மஹாலுக்கு சென்ற இருநாட்டு தலைவர்களும் பார்வையிட்டனர். அத்துடன், கைவினைப் பொருட்களை விற்பனைக் கடைக்கும் சென்றனர். அப்போது, அயோத்தி ராமர் கோயிலின் மாதிரியை வாங்கி, பிரான்ஸ் அதிபருக்கு பரிசாக வழங்கினார்.

அக்கா பவதாரிணி மறைவு… இலங்கை புறப்பட்டார் யுவன்சங்கர் ராஜா…

அங்குள்ள தேநீர் கடையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு மசாலா டீ வாங்கிக் கொடுத்தார்.

MUST READ