spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபாஸூக்கு மிகப்பெரிய பரிசு கொடுக்க காத்திருக்கும் சந்தோஷ் நாராயணன்

பிரபாஸூக்கு மிகப்பெரிய பரிசு கொடுக்க காத்திருக்கும் சந்தோஷ் நாராயணன்

-

- Advertisement -
நடிகர் பிரபாஸூக்கு மிகப்பெரிய பரிசு வைத்திருப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இன்றைய இந்திய திரையுலகில் முன்னணி நடிகராகவும், பான் இந்தியா நடிகராகவும் உயர்ந்த அந்தஸ்தை கொண்டிருப்பவர் நடிகர் பிரபாஸ். தெலுங்கில் பல திரைப்படங்கள் அவர் நடித்துள்ளார். இருப்பினும் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஷ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தில், பாகுபலி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றி நடிகர் பிரபாஸை உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றது. தற்போது பிரபாஷ் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சலார்.

we-r-hiring
சலார் திரைப்படத்தை அடுத்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ப்ராஜெக்ட் கே. அதாவது கல்கி 2898 AD.இப்படம் இந்திய திரை உலகில் மாபெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இதில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார். மேலும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதாணி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வை ஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

கல்கி திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். மாபெரும் நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகும் படத்திற்கு இசையமைக்கு வாய்ப்பு சந்தோஷிற்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரபாஸூக்கு இப்படத்தில் எதிர்பாராத பரிசு ஒன்றை வழங்க இருப்பதாக தெரிவித்தார். பிரபாஸிற்கு ஒரு மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இசையை கொடுக்க காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

MUST READ