Homeசெய்திகள்கட்டுரைஅன்புமணியின் எண்ணம் சரியானதே... ராமதாஸ் திரைமறைவில் சொல்லி இருக்கலாம்... தராசு ஷியாம் கருத்து!

அன்புமணியின் எண்ணம் சரியானதே… ராமதாஸ் திரைமறைவில் சொல்லி இருக்கலாம்… தராசு ஷியாம் கருத்து!

-

- Advertisement -

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதல் பாட்டாளி மக்கள் கட்சியை பலவீனப்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

shyam
மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையிலான வார்த்தை மோதல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ராமதாஸ் – அன்புமணி இடையே ஏற்கனவே இருந்து வந்த உட்பூசல் இன்று பகிரங்கமாகவே வெளிப்பட்டிருக்கிறது. அது ஊடகங்களிலும் செய்தியாக மாறி இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் 1989 பாமக தொடக்க விழாவில் பேசிய மருத்துர் ராமதாஸ், தானோ, தனது மகனோ எந்த காலத்திலும் அரசியலுக்கு வரமாட்டோம் என கூறியிருந்தனர். அப்படி வந்தால் எனக்கு சவுக்கடி கொடுங்கள் என கூறியிருந்தார். ஆனால் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவர் ஆகிவிட்டார். இன்றைக்கு பேரன் முகுந்தனுக்கு இன்னொரு பதவி. மகனுக்கும், பேரனுக்கும் இடையே இருக்கக் கூடிய ஒரு குடும்ப மோதலாகத்தான் இதை நாம் பார்க்க வேண்டும். ஆனால் பாமக கட்சி பிளவுபடுவது எங்களை போன்றோருக்கு வருத்தம் தான். இடஒதுக்கீடு, சமுகநீதி போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவர்கள், குறிப்பாக ராமதாஸ் – அன்புமணி இடையே நிலவும் இந்த பகிரங்க மோதல் வருத்தம்தான் தருகிறது.

1989-ல் தொடங்கிய ஒரு கட்சி தமிழ்நாட்டின் இன்று தமிழ்நாடடின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேர்ந்து விட்டதா என்றால் இல்லை. கட்சி தொடங்கி கிட்டத்தட்ட 35 ஆண்டு காலம் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகளில் கட்சியின் பாதை என்ன? அவற்றில் எதை எல்லாம் மாற்றம் செய்ய வேண்டும். இது வந்து அன்புமணியின் சிந்தனை என்றால் நாம் அதை வரவேற்கத்தான் வேண்டும். ஒரு கட்சி எப்போதும் பழைய சித்தாந்தத்தில் போக முடியாது. காலச்சூழலக்கு ஏற்ப கட்சியின் பாதையில் மாற்றம் ஏற்பட வேண்டும். மருத்துவர் ராமதாஸ் கட்சியின் மூத்தவர்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறார். அன்புமணியோ கட்சியின் இளையவர்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறார். இயல்பாகவே, இளையோர் ஆதரவு அன்புமணிக்கு கட்சிக்குள் இருக்கும். மேலும், ராமதாசுக்கு சட்ட ரீதியாக கட்சியில் எந்த பொறுப்பும் கிடையாது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து பதிவுகளிலும் அன்புமணி மற்றும் தற்போதைய நிர்வாகிகளின் பெயர்கள் தான் இருக்கும். அதனால் இந்த விவகாரம் தொடர்பாக ராமதாஸ் திரைமறைவாக அன்புமணியிடம் பேசலாம். ஆனால் இவரைத்தான் நியமிக்க வேண்டும் என பகிரங்கமாக அறிவிக்கக்கூடாது.

இந்த பிரச்சினை குடும்பத்திற்குள் இருவருக்குள் ஏற்பட்ட மோதலாகதான் பார்க்கிறோம். ஜி.கே.மணி போன்ற மூத்த தலைவர்கள் அவர்களை இன்றோ, நாளையோ சமரசம் செய்து வைத்து விடுவார்கள். கட்சி தொடங்கியபோது ராமதாஸ் அளித்த வாக்குறுதி என்ன ஆனது. அன்புமணி அவரது மகன் எம்.பி.ஆகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனால் இன்று பேரனும் வருகிறார். மகனுக்கும், பேரனுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு சீரானாலும் தொண்டர்களும், சராசரி வாக்காளர்களும் என்ன நினைப்பார்கள்?. பாமகவின் 35 வருட சமூகநீதி போராட்டம் இதன் மூலம் வீணாகும். இந்த மோதல் பாட்டாளி மக்கள் கட்சியை பலவீனப்படுத்தும். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மோதல் என்பது சாதாரண விஷயம் இல்லை. இது நிச்சயமாக தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ