spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅறிவாலயத்திற்கு போன ராமதாஸ்! முட்டுச் சந்தில் அன்புமணி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

அறிவாலயத்திற்கு போன ராமதாஸ்! முட்டுச் சந்தில் அன்புமணி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

2006ஆம் ஆண்டில் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை, தனது மகன் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதற்காக மருத்துவர் ராமதாஸ் சமரசம் செய்துகொண்டார் என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மருத்துவர் ராமதாஸ் – அன்புமணி மோதல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அன்புமணி ராமதாஸ், நான் தவறே செய்யாவிட்டாலும் மன்னிப்பு கேட்பதாகவும், மகனாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகவும் அய்யா ராமதாஸ் என்ன சொல்கிறாரோ அதை நான் கேட்பேன் என்று சொல்கிறார். இதைதான் நிபந்தனைகளுடன் மன்னிப்பு என்று சொல்வார்கள். அன்புமணி, பாமக தலைவராக தொடரக்கூடாது என்று தான் மருத்துவர் ராமதாஸ் சொல்கிறார். ராமதாசின் விருப்பத்தின் படி செயல்படுவதாக இருந்தால் தலைவராக இருக்க முடியாது. செயல் தலைவராக தான் இருக்க முடியும். ராமதாஸ், அன்புமணிக்காக கட்சியின் நலன்களை எவ்வளவோ தியாகம் செய்திருக்கிறார். 2006ல் அறிவாலயத்திற்கு வந்து ஆதரவு கடிதத்தை வழங்கினார். அன்புமணியை எம்.பி. ஆக்குவதற்காக கோட்டைக்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்தார்.

பாமகவின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.கே.மூர்த்தி

1989ஆம் ஆண்டு பாமக தொடக்க விழாவில் ராமதாஸ் பேசியபோது, நானும் இருந்தேன். அப்போது ராமதாஸ் அளித்த வாக்குறுதி தான், நானோ, என் குடும்பத்தினரோ எந்த பதவியும் வகிக்க மாட்டோம். எந்த கோட்டைக்கும் போக மாட்டோம். அதிகார பீடத்தில் காலடி எடுத்து வைக்க மாட்டோம். இது எனது சத்தியம். இதனை நான் மீறினால், என்னை சந்தியில் நிறுத்திவைத்து சவுக்கால் அடியுங்கள் என்று சொன்னார்.  அன்புமணி, மத்திய அமைச்சர் ஆகிய போது, ராமதாசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. எனவே ராமதாஸ் எப்போதும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது கிடையாது. அன்புமணியும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது கிடையாது. இருவரும் சராசரி அரசியல்வாதிகள் தான். நாங்கள் பார்த்த பாமக, வன்னியர் சங்கம் போன்றவை ஏழைகளை பிரதிநிதித்துவப் படுத்துபவையாக இருந்தன. இன்றைக்கு நான் பார்க்கிற பாமக போயஸ் கார்டனை விட 10 மடங்கு அதிகமாக உள்ளது. தைலாபுரம் தோட்டத்தின் மதில் சுவரை பார்த்தாலே நமக்கு மயக்கம் வருகிறது. ராமதாஸ் வீட்டு நீச்சல் குளத்தில் இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

நான் பார்த்த அரசியல் தலைவர்களில் காமராஜர் மிகவும் எளிமையானவர். அண்ணா, கலைஞர், ஜெயலலிதா, தற்போதைய ஸ்டாலின் வரை யாரும் தங்களுடைய வீட்டில் நீச்சல் குளம் கட்டியது கிடையாது. எம்.ஜி.ஆர் தனது ராமபுரம் தோட்டத்தை மாளிகையாக கட்ட விரும்பவில்லை. மாடி கட்டினால் அது கட்சியை பலவீணப்படுத்தும் என்று வேண்டாம் என மறுத்துவிட்டார். 1977 – 1978களில் முதலமைச்சர் அலுவலகத்திற்கு ஏசி வசதி கிடையாது. அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், இரவு நேரத்தில் முதலமைச்சர் அலுவலகத்திற்கு நுழைந்துவிட்டார். அதன் பிறகு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, அறை மாற்றப்பட்டு ஏசி வசதி செய்துதரப்பட்டது. இதுதான் பழைய வரலாறு. அப்போது பாமக எளிமையை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. ஊமை ஜனங்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன் என்றால், அந்த ஊமை ஜனங்கள் அதே நிலைமையில் தான் இன்னமும் இருக்கிறார்கள்.

தற்போது நடைபெறுவது எல்லாம் மாநாடுகளே அல்ல. எங்கள் காலத்தில் மாநாட்டு தீர்மானங்களை சுற்றுக்கு விடுவார்கள். தனித் தீர்மானங்கள் கொண்டு வருவார்கள். ஆனால் தற்போது அரசியல் கட்சிகள் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு, பத்திரிகையாளர்களிடம் கொடுத்து விடுகிறார்கள். கட்சியினரே, பத்திரிகையாளர்களிடம் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். இன்றய தேதிக்கு மருத்துவர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருமே ஆளுக்கு ஒரு முட்டுச் சந்துக்கு போய்விட்டனர். இனிமேல் சேர்ப்பது போன்ற ஒரு நிலைமை இல்லை. ஒருவேளை இருவரும் சேர்ந்தாலும் பழைய வாக்கு வங்கி இருக்குமா? எப்படி இருக்கும். வன்னியர்கள் தானே அவர்களின் வாக்கு வங்கியின் அடிப்படையாகும். பாமகவினருக்கு தான் நாம் கல்வி கொடுத்து, மாநாட்டிற்கு காரில் வர வைத்து விட்டோமே. இது தந்தை  – மகன் சண்டை என்று வைத்துக்கொண்டாலும் எதற்காக சண்டை என்ற கேள்வி எழும் அல்லவா. எதற்காகவோ சண்டை என்று வைத்துக் கொண்டாலும் அது நல்லதுக்காக இல்லை. இதனால் இருவருக்குமே பாதிப்புதான்.

இடதுசாரிகள் ஆட்சி செய்த கேரளா, மேற்குவங்கத்தில் ஆட்சியில் பங்கு என்கிற முறை இருந்தது. கேரளாவில் இரு அணிகள்தான் உள்ளன. வாழப்பாடி ராமமூர்த்தி காலத்தில் 2 அணிகள் தான் இருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கும் அதுதான் நல்லது என்று சொல்வார். கட்சிகள் எந்த அணியில் வேண்டுமானாலும் இருக்கலாம்.  மேற்கு வங்கத்தில் ஆளும் கூட்டணிதான். கூட்டணி கட்சிகளின் வலிமைக்கு ஏற்ப அமைச்சரவையில் இடம் தரப்படும். தமிழ்நாட்டில் அந்த பரிசோதனை முயற்சியை யாரும் எடுக்கவில்லை. 2006ல் ஒரே ஒருமுறை நடைபெற்றது. திமுக 96 இடங்களை தான் வென்றது. அதையும் கலைஞர் சாதுரியமாக செயல்பட்டு கூட்டணி ஆட்சி அமைக்காமல் தடுத்துவிட்டார்.  18 இடங்கள் கொண்ட பாமக தான் முதன் முதலில் திமுக அரசு அமைக்க ஆதரவு தெரிவித்தது. அன்புமணி மத்திய அமைச்சராக திமுக உதவி செய்தது. அதனால் ராமதாஸ் காம்பரமைஸ் செய்துகொண்டார். தமிழ்நாட்டில் பாமக ஆட்சிக்கு வரும் வாய்ப்பை, அன்புமணிக்காக, ராமதாஸ் தான் விட்டுக் கொடுத்தார்.

ஓரணியில் தமிழ்நாடு! புதிய திட்டம் – முதல்வர் அறிவிப்பு…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய அரசியல் என்று வருகிறபோது காம்ப்ரமைஸ் செய்ய வேண்டி வரும். அவர்கள் திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்டு வெளியேற முடியாது. இதே நிலைமை தான் காங்கிரஸ் கட்சிக்கும். தேசிய அரசியலுக்காக, மாநில அரசியலில் நிறைய காம்ப்ரமைஸ் சாத்தியமாகும். அந்த காம்ப்ரமைஸ் வரத்தான் செய்யும். அப்போது திமுக கூட்டணியில் இருந்து  ஏதாவது கூட்டணி கட்சிகள் வெளியே போக வாய்ப்பு உள்ளதா? என்று கேள்வி எழலாம். எனக்கு தெரிந்து இரண்டு விஷயங்கள் நடந்தால், அது நடைபெற சாத்தியம் உள்ளது. அப்போது அதிமுக தேசிய அளவில் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும். அப்போது எவ்வளவு பெரிய நகர்வு பாருங்கள். அது உடனடியாக சாத்தியமில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ