Homeசெய்திகள்கட்டுரைபொறியில் சிக்கிய சீமான்! பொறிந்து தள்ளிய கயல்! சரமாய் வெடித்த ஸ்ரீவித்யா!

பொறியில் சிக்கிய சீமான்! பொறிந்து தள்ளிய கயல்! சரமாய் வெடித்த ஸ்ரீவித்யா!

-

- Advertisement -

விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் இருந்து சீமானை அதிமுக, பாஜக பாதுகாத்து வந்ததாக திராவிட நட்புக்கழக நிர்வாகி ஸ்ரீவித்யா குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Srividhya
Srividhya

சீமான் மீதான பாலியல் புகாரில் தமிழக அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்து ஸ்ரீவித்யா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி விசாரணைக்கு அழைப்பதற்காக போலீசார் அவரது வீட்டில் சம்மனை ஒட்டியுள்ளனர். சட்டப்படி யாருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதோ அவர் படித்துவிட்டு கிழிக்கலாம். ஆனால் அந்த வழக்குடன் தொடர்பு இல்லாத மூன்றாவது நபர் அதை கிழித்தால் குற்றம் ஆகும். சீமான் மனைவி கயல்விழி நான்தான் படிப்பதற்காக கிழிக்க சொன்னேன் என்கிறார். ஆனால் சட்டப்படி கயல்விழியும் அந்த சம்மனை கிழிக்கக்கூடாது. சம்பந்தப்பட்ட நபருக்கு இந்த தகவல் சென்று சேரக்கூடாது என்று உங்களுக்கு உள்நோக்கம் உள்ளது என்று கயல்விழி மீதுதான் குற்றம்சாட்டுவார்கள். சீமான் வீட்டின் காவலாளி துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார் என்பது வீடியோவில் பார்த்தாலேயே தெரிகிறது. முன்பு விசாரணைக்கு ஆஜராக மாட்டேன் என்று சொன்ன சீமான் பிரச்சினை பெரிதான பின்னர் தற்போது விசாரணைக்கு ஆஜராவதாக சொல்கிறார். இதை முன்னதாக செய்தால் என்ன?

சீமான் மீது வேண்டுமென்றே அச்சறுத்த வேண்டும் என்பதற்காக இதை செய்வதாக புகார் தெரிவிக்கிறார். சீமானை எதற்காக விசாரணைக்கு அழைத்துள்ளனர் என்றால் அவர் செய்த தவறுக்காகதான். அவர் ஒன்றும் மாநில உரிமைகளுக்காகவோ, மக்களின் உரிமைகளுக்காகவோ போராடி, அதற்காக பிரச்சினை வந்து விசாரிக்க வில்லை. ஒரு பெண்ணை ஏமாற்றியுள்ளார். பாலியல் ரீதியாகவும் சுரண்டியுள்ளார். பொருளாதார ரீதியாகவும் சுரண்டி ஏமாற்றியுள்ளார். 2011 முதல் இந்த வழக்கு போய்  கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவோ, எடப்பாடி பழனிசாமியோ கை வைக்காத போது, திமுக வந்தால் மட்டும்தான் அந்த பெண்ணை அழைத்து வந்து பேச வைக்கிறார்கள் என்று சொல்கிறார். ஆனால் பாதிக்கப்பட்ட நடிகையோ அதிமுக சீமானுக்கு ஆதரவாக இருந்ததாக குற்றம்சாட்டுகிறார். இந்த வழக்கு விசாரணையை நடத்த விடாமல் தடுத்தது, சீமானை பாதுகாத்தது எல்லாமே அதிமுகதான் என்கிறார். சீமான் போன்ற பிரபலமான நபர், தன்னுடைய வசதி வாய்ப்புகளை, அதிகாரத்தை பயன்படுத்தி விஜயலட்சுமியை தொடர்ந்து ஏமாற்றி, அவமரியாதை செய்து வருகிறார். இதில் இருந்து காப்பாற்றியது பக்கபலமாக இருந்தது அதிமுகதான் என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி எழுதி கொடுத்த வாபஸ் மனு செல்லுபடி ஆகுமா? சட்ட வல்லுனர்களுடன்போலீசார் ஆலோசனை!

சீமானை பல ஆண்டுகளாக அதிமுக, பாஜக காப்பாற்றிக்கொண்டு வந்துள்ளது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த வழக்கு 2011 முதல் இருக்கிறது. பாதிக்கப்பட்ட நடிகை அப்போதில் இருந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறா. ஏன் அதிமுக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிமுகவை தானே கேள்வி எழுப்புகிறோம். விஜயலட்சுமி  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது செல்போனுடன் ஆவணங்களை ஒப்படைத்துச் சென்றுள்ளார். மதுரையில் தங்களுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், அதில் இருந்த ஆதாரங்களை எல்லாம் அழித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். சீமானை பழிவாங்க வேண்டும் என்றால் திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே நடவடிக்கை எடுத்திருக்கும். நீங்கள் பெண்ணை ஏமாற்றினால் அப்படித்தான் வழக்கு எடுப்பார்கள். சீமான் தமிழ்நாட்டின் 3வது பெரிய கட்சி என்கிறார்கள். அவருக்கு வந்த வாக்குகள் என்பது, அவரது அரசியல் செயல்பாடுகளுக்காக வரவில்லை. ஏன் அப்படி என்றால்? தன்னுடைய அரசியல் செயல்பாடுகளுக்காக தான் தனக்கு வாக்கு வங்கி உள்ளது என்ற எண்ணம் நம்பிக்கை சீமானுக்கு இருந்தால், அவர் விஜய் அரசியலுக்கு வந்த உடன் மார்பில் அடித்துக்கொண்டு கதற மாட்டார். அவர் அரசியல் பேசவில்லை என்பது அவருக்கே தெரியும். மக்களை சிந்தனை திறன் அற்றவர்களாக திசை திருப்புகிற வேலையை ஆர்எஸ்எஸ் பாஜக செய்தது. அதைதான் சீமான் செய்துகொண்டிருக்கிறார். அதிமுகவும் அதற்கு பக்கபலமாக இருந்தது. மற்றபடி சீமான் அரசியலில் ஒன்றும் சாதித்துவிட வில்லை.

சீமான் மீதான வழக்கில், நீதிமன்றமே ஏன் இந்த வழக்கில் இவ்வளவு நாளாக விசாரணை நடைபெற வில்லை என கேள்வி எழுப்பியது. 4 வாரத்தில் வழக்கை விசாரித்து அறிக்கை தர வேண்டும் என காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. திமுக அரசு சொன்னதா?. தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் நீதிமன்றத்திற்கு சென்றார். அதனை விசாரித்த நீதிபதி, வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது. அந்த பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளார். ஏன் இதுவரை விசாரிக்கவில்லை என காவல்துறையை கூப்பிட்டு ஒப்படைத்துள்ளனர்.  பாதிக்கப்பட்ட பெண் என்பதால் சட்டப்படி காவல்துறையினர் பெங்களுரு சென்று அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். ஆனால் சீமான் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். இவருக்குதான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் இவரை தேடிச்சென்று சம்மன் தர வேண்டுமா? இப்போது வழக்கில் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டிற்கு சென்றுள்ளார். எங்கே சென்றால் தான் காப்பாற்றப்படுவேனோ அங்கே சீமான் சென்றிருக்கிறார்.

சீமான் விஜயலட்சுமியை மட்டும் அசிங்கப்படுத்தவில்லை. பெண்கள் எல்லோரையும்தான் அசிங்கப்படுத்துகிறார். தனது கட்சியில் உள்ள பெண்களையே பிசிறு மசிறு என்று பேசியவர். காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை,  நான் என்ன கையை பிடித்து இழுத்தேனா என அநாகரீகமாக பேசியவர். வீரலட்சுமி என்பவரை அசிங்கமாக பேசுகிறார். விஜயலட்சுமி புகார் அளித்த பின்னர்தான் தனக்கு பெண் ரசிகைகள் அதிகரித்துவிட்டனர் என சொன்னவர் சீமான்.  இந்த வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் இன்று பேசிய சீமான், ஏதோ வயசுக்கு வந்து குச்சி கட்டி உட்கார வைத்த பெண்ணை நான் தூக்கிச்சென்று பாலியல் வன்புணர்வு செய்து விட்டேனா என்கிறார். அப்படி என்றால் அவர் சிந்தனை எந்த அளவிற்கு உள்ளது. அவர் விஜயலட்சுமியை எந்த அளவிற்கு கொடுமை செய்திருப்பார்.

கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் குறித்து அவதூறு கருத்தை தெரிவித்தவர் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன். உடனே அதை டெலிட் செய்துவிட்டார். அப்போது அவர் சொன்னது உண்மை இல்லை. சீமான் தனிப்பட்ட முறையில் ஒரு பெண்ணை ஏமாற்றி இருந்தால் அது சாதாரணமாகத்தான் விசாரிக்கப்பட்டிருக்கும். ஆனால் சீமான் ஒரு அரசியல் கட்சி தலைவர் என்ற அதிகாரத்தினால் வழக்கு நீதிமன்றத்திற்கே செல்லாமல் தடுத்து வைத்திருந்தார். இப்போது அது நீதிமன்றத்திற்கு வந்துவிட்டது அவ்வளவுதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ