புதுகோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் ரமேஷ். இவர் கல்வி சுற்றுலா என்ற பெயரில் மாவட்ட பள்ளி கல்வி துறைக்கு தெரியாமலேயே மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்றிருக்கிறார்.
வேதியல் ஆசிரியரான இவர் தன்னிடம் படிக்கும் மூன்று +2மாணவிகளையும், 2 மாணவர்களையும், தன்னுடைய காரில் கொடைக்கானல் வரை சுற்றுலா என்ற பெயரில் அழைத்துச்சென்று அங்கு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். பின்னர் எழுந்த புகாரின் அடிபடையில் அவர் கைதும் செய்யப்பட்டர்.
இந்த புகார் குறித்து சக மாணவர்களிடம் விசாரித்த பொழுது வேதியல் ஆசிரியர் என்பதால் வேதியல் ஆய்வகம்(Chemistry Lab) செல்லும் பொழுதெல்லாம் பாலியல் ரீதியான தொல்லைகளை மாணவிகளுக்கு கொடுத்து வந்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் ஒரு மாணவியிடம் பேசி, சுற்றுலா என்ற பெயரில் அவர்களை அழைத்து சென்று இதே போன்று செயல்பட்டு வந்து இருக்கிறார். ஒரே மாணவியை அழைத்துச்சென்றால் சந்தேகம் வரும் என்று, நான்கு ஐந்து மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்து சென்றது தெரியவந்துள்ளது.
இதற்கு முன் அரிமளம் பள்ளியில் வேலை பார்த்து வந்தப்போது இதே போன்று ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்தால், அந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டார். அதன் பின் அவரை அந்த பள்ளி இடைநீக்கம்(suspend) செய்தது.
இதன் பின்னரே ரமேஷ் அன்னவாசல் பள்ளிக்கு வந்தார். அங்கேயும் இவரின் பெயரில் பல புகார்கள் எழுந்துள்ளது. ரமேஷின் மனைவி பிரியாவும் அதே பள்ளியில் தான் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதுக்குறித்து, அவரின் மனைவியிடம் விசாரித்த போது என் கணவர் 20ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இதுவரை அவரின் பெயரில் புகார் எதுவம் வந்ததில்லை. அந்த மாணவர்கள் இவரை கட்டாய படுத்தியதால் மட்டுமே அவர் அழைதுச்சென்றார். இதற்கு முன் இறந்த மாணவிக்கும், இப்பொழுது தற்கொலை செய்து கொண்டு இருக்கும் மாணவிக்கும், அவர் வகுப்பு எடுத்து இருக்கிறார். அவ்வளவுதான், மற்றவை எல்லாம் என் கணவருக்கு வேண்டாதவர்கள் வதந்திகள் பரப்பி வருகின்றார்கள் என்று கூறினார்.
நிருபர் – லோகேஷ்வரி