- Advertisement -
இந்திய திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இவருக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகிய இரண்டு மகன்களும், பவதாரிணி என்ற மகளும் உள்ளனர். அதில் மகள் பவதாரிணிக்கு வயது 47 ஆகும். இவரது திரையுலகில் பின்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். ராசய்யா என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான அவர், ரேவதி இயக்கிய படத்தின் மூலம் இசை அமைப்பாளராகவும் அறிமுகம் ஆகினார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து கோலிவுட்டில் பல பாடல்கள் பாடி இருக்கிறார்.
இதனிடையே கல்லீரல் புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் இலங்கை சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடலை சென்னை கொண்டு வர இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இலங்கை சென்றுள்ளனர். நாளை மாலை அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய உள்ளனர்.
The voice that forever lives in the heart of people for its innocence and love! You were a pure soul! Gone too soon! I pray to God to give strength to the family of Illayaraja sir and my brother @thisisysr at this moment! Rest in peace Bhavatharini. 💔#Bhavatharini #RIP pic.twitter.com/PO3ArYGq49
— Silambarasan TR (@SilambarasanTR_) January 25, 2024