spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாடகி பவதாரணி மறைவு... சிம்பு, விஷால் இரங்கல்....

பாடகி பவதாரணி மறைவு… சிம்பு, விஷால் இரங்கல்….

-

- Advertisement -
காற்றில் கலந்த குயிலோசை..... இளையராஜாவின் செல்ல மகள் பவதாரிணியின் நினைவலைகள்!
இந்திய திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இவருக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகிய இரண்டு மகன்களும், பவதாரிணி என்ற மகளும் உள்ளனர். அதில் மகள் பவதாரிணிக்கு வயது 47 ஆகும். இவரது திரையுலகில் பின்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். ராசய்யா என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான அவர், ரேவதி இயக்கிய படத்தின் மூலம் இசை அமைப்பாளராகவும் அறிமுகம் ஆகினார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து கோலிவுட்டில் பல பாடல்கள் பாடி இருக்கிறார்.

இதனிடையே கல்லீரல் புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் இலங்கை சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடலை சென்னை கொண்டு வர இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இலங்கை சென்றுள்ளனர். நாளை மாலை அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் சிம்பு அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உங்களின் அன்பான, குழந்தைத் தனமா குரல் என்றென்றும் மக்களின் இதயங்களில் நீடித்திருக்கும் என சிம்பு டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல, நடிகர் விஷாலும் பவதாரிணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

MUST READ