Homeசெய்திகள்சினிமாவிஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத நடிகை ராதா

விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத நடிகை ராதா

-

- Advertisement -
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நுரையீரல் தொடர்பான பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், கிசிச்சை பலனின்றி அவர் மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரை நட்சத்திரங்களும், நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தற்போது தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி, சூரி, சூர்யா, விஷால் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகை ராதாகவும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். அம்மன் கோவில் கிழக்காலே, மனக்கணக்கு ஆகிய பல படங்களில் விஜயகாந்தும், ராதாவும் இணைந்து நடித்துள்ளனர். இதில் அம்மன் கோவில் கிழக்காலே திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது.

செய்தியாளர்களிடம் பேசிய ராதா, விஜயகாந்த் மிகவும் தன்மையான நபர், அவருடைய பிறந்தநாளின்போது தொடர்ந்து செல்போனில் வாழ்த்து தெரிவித்து நலம் விசாரிப்பேன். அண்மையில் மகள் திருமணத்திற்காக சென்றபோது கூட அவரை பார்க்க முடியவில்லை, பிரேமலதாவிடம் தான் பத்திரிகை கொடுத்துவிட்டு சென்றேன். ஆனால், விஜயகாந்தை இந்த நிலையில் வந்து பார்ப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என அவர் கண்ணீர் மல்க பேசினார்.

MUST READ