மறைந்த நடிகர் விஜயகாந்த் வீட்டிற்க்கு நேரில் சென்ற நடிகை ரம்பா, அவரது உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் திரையுலகில் புரட்சிக் கலைஞராக கொண்டாடப்பட்ட தங்க மகன் விஜயகாந்த். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நுரையீரல் பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், கிசிச்சை பலனின்றி அவர் மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரை நட்சத்திரங்களும், நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமன்றி அவரது இல்லத்திற்கும் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் வௌிநாட்டிலிருந்து அண்மையில் இந்தியா திரும்பிய நடிகை ரம்பா, விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி பின்னர், அவரது இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்கு அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயிருடன் இருக்கும்போது ஒரு முறைகூட விஜயகாந்த் சாரை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த வேதனை எனக்கு இறுதி வரை இருக்கும் என கண்ணீர் மல்க பேசினார்.