spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகவினைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு நடிகருக்கு வில்லியாகும் ஆண்ட்ரியா

கவினைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு நடிகருக்கு வில்லியாகும் ஆண்ட்ரியா

-

- Advertisement -
kadalkanni
பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிக்கும் புதிய திரைப்படத்தில் ஆண்ட்ரியா வில்லியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலம் நாயகியா அறிமுகமானவர் ஆண்ட்ரியா. முதல் படத்திலேயே தாயாக நடித்து அசத்தி இருப்பார். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு, ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, துப்பறிவாளன், அவள், வட சென்னை, மாஸ்டர், அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உருவெடுத்தார். விஜய், அஜித், கமல்ஹாசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து அவர் நடித்துள்ளார்.

நடிகை மட்டுமன்றி சிறந்த பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. அந்நியன், வேட்டையாடு விளையாடு, யாரடி நீ மோகினி, ஆதவன், ஆயிரத்தில் ஒருவன், தீராத விளையாட்டு பிள்ளை, கோவா, மதராசப்பட்டினம், மன்மதன் அம்பு, தாதா, வெடி உள்பட பல திரைப்படங்களில் பாடல்கள் பாடி இருக்கிறார். இதுமட்டுமன்றி, நண்பன், ஆடுகளம், ஆகிய திரைப்படங்களில் நாயகிகளுக்கு டப்பிங்கும் பேசியிருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிசாசு 2 திரைப்படத்தில் ஆண்ட்ரியா நடித்து முடித்துள்ளார். மேலும், வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் மாஸ்க் திரைப்படத்திலும் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். இப்படத்தில் கவினுக்கு வில்லியாக ஆண்ட்ரியா நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், தெலுங்கில் நானி நடிக்கும் புதிய திரைப்படத்தில் ஆண்ட்ரியா வில்லியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சுஜீத் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகிறது. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ