- Advertisement -
பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிக்கும் புதிய திரைப்படத்தில் ஆண்ட்ரியா வில்லியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலம் நாயகியா அறிமுகமானவர் ஆண்ட்ரியா. முதல் படத்திலேயே தாயாக நடித்து அசத்தி இருப்பார். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு, ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, துப்பறிவாளன், அவள், வட சென்னை, மாஸ்டர், அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உருவெடுத்தார். விஜய், அஜித், கமல்ஹாசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து அவர் நடித்துள்ளார்.


நடிகை மட்டுமன்றி சிறந்த பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. அந்நியன், வேட்டையாடு விளையாடு, யாரடி நீ மோகினி, ஆதவன், ஆயிரத்தில் ஒருவன், தீராத விளையாட்டு பிள்ளை, கோவா, மதராசப்பட்டினம், மன்மதன் அம்பு, தாதா, வெடி உள்பட பல திரைப்படங்களில் பாடல்கள் பாடி இருக்கிறார். இதுமட்டுமன்றி, நண்பன், ஆடுகளம், ஆகிய திரைப்படங்களில் நாயகிகளுக்கு டப்பிங்கும் பேசியிருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.



