spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'புறநானூறு' படத்தில் நடிக்க போட்டி போடும் தனுஷ் - சிவகார்த்திகேயன்!

‘புறநானூறு’ படத்தில் நடிக்க போட்டி போடும் தனுஷ் – சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

நடிகர் சூர்யா தற்போது தனது கங்குவா திரைப்படத்தை முடித்துவிட்டு சூர்யா 44 திரைப்படத்தில் நடித்த வருகிறார். இதற்கு முன்னதாக தனது 43-வது படமான புறநானூறு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். 'புறநானூறு' படத்தில் நடிக்க போட்டி போடும் தனுஷ் - சிவகார்த்திகேயன்!அதன்படி சுதா கொங்கரா இயக்கம் புறநானூறு திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் படமானது 1950ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பில் இருந்தே புறநானூறு திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் அரசியல் காரணங்களுக்காக நடிகர் சூர்யா படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் புறநானூறு திரைப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிகர் தனுஷ் அல்லது சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் இது தொடர்பாக சுதா கொங்கரா, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்பட்டது. 'புறநானூறு' படத்தில் நடிக்க போட்டி போடும் தனுஷ் - சிவகார்த்திகேயன்!இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய நெருங்கிய வட்டாரங்களில், அரசியல் பின்னணியில் ஆன கதை ஒன்று இருக்கிறது அதில் நான் நடித்தால் ஏதேனும் பிரச்சனை வருமா என்பது போல் விசாரித்து வருகிறாராம். தனுஷின் நண்பர்களும் தைரியமாக நீங்கள் நடிக்கலாம் என்று கூறி வருகிறார்களாம். இந்நிலையில் தனுஷ் புறநானூறு படத்தில் நடிக்க மறுத்தால் உடனடியாக சிவகார்த்திகேயன் களமிறங்க ரெடியாக இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே சுதா கொங்கரா இயக்க உள்ள புறநானூறு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க போவது தனுஷா? அல்லது சிவகார்த்திகேயனா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ