தனுஷின் இட்லி கடை திரைப்படம் குட் பேட் அக்லி படத்தினால் ஒத்திவைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தனுஷ் நடிப்பில் தற்போது தேரே இஷ்க் மெய்ன் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகர் தனுஷ் இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். கிரண் கௌஷிக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், ராஜ்கிரண் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தேனி, ராமநாதபுரம் போன்ற பல பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. நடிகர் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் படத்தில் பிஸியாக இருக்கும் காரணத்தால் இனிவரும் நாட்களில் தனுஷ், இட்லி கடை படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தை 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு இருந்தது. அதன்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. ஆனால் ஏப்ரல் 10 அன்று அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாக இருக்கும் காரணத்தால் இட்லி கடை திரைப்படம் தள்ளிப்போகும் என சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த படம் 2025 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என புதிய தகவல் கிடைத்துள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா திரைப்படம் 2025 ஜூன் 20 ஆம் தேதி ரிலீஸாகும் என்பது குறிப்பிடத்தக்கது.