துல்கர் சல்மான் நடிக்கும் காந்தா படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரை உலகில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் கடைசியாக லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியானது. இது தவிர துல்கர் சல்மான் பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் இவர் ‘காந்தா’ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை துல்கர் சல்மானின் வேப்பரர் பிலிம்ஸ் நிறுவனமும், ராணா டகுபதியின் ஸ்பிரெட் மீடியா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது.
எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் பாக்கியஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜானு சாந்தர் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படமானது கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ திரைப்படத்தின் வசூல் பாதிக்கக்கூடாது என்பதற்காக இந்தப் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.
Two hearts & a thousand emotions in our song #KanmaniNee 🫶🏻
The heartbeat of #kaantha
Premieres tomorrow at 4:30pm❤A @SpiritMediaIN and @DQsWayfarerFilm production 🎬#Kaantha #DulquerSalmaan #RanaDaggubati #SpiritMedia #DQsWayfarerfilms #Bhagyashriborse #SelvamaniSelvaraj… pic.twitter.com/8BrV0SVg3y
— Dulquer Salmaan (@dulQuer) October 21, 2025

அதன் பிறகு இப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை (அக்டோபர் 22) மாலை 4.30 மணி அளவில் இந்த படத்தில் இருந்து ‘கண்மணி நீ’ எனும் பாடல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


