மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கான முன்னணி நடிகர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின்லெஜன்ட் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக களமிறங்க இருக்கிறார். அந்த படத்திற்கு மார்கழி திங்கள் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கான முன்னணி நடிகர்களின் தேடுதல் வேட்டை கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. தற்போது ‘மார்கழி திங்கள்’ படத்தின் முன்னணி நடிகர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ரக்ஷனா மற்றும் ஷாம் செல்வன் இருவரும் இந்த படத்தின் முன்னணி நடிகர்களாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு பேருக்கும் இது அறிமுக படமாக இருக்கும்.
அவர்களின் போஸ்டர் வெளியிட்ட நடிகர் கார்த்தி “உங்களது கனவு நினைவானது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது மனோஜ். ரக்ஷனா மற்றும் ஷ்யாம் செல்வன் இருவரையும் ‘மார்கழி திங்கள்’ படத்தின் முன்னணி நடிகர்களாக அறிவிப்பதில் மகிழ்ச்சி. சுசீந்திரன், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட படக் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மார்கழி திங்கள் படத்தை இயக்குனர் சுசீந்திரன் தனது வெண்ணிலா ப்ரொடக்ஷன் கீழ் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார்.