Homeசெய்திகள்சினிமாசைரன் திரைப்பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

சைரன் திரைப்பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

-

- Advertisement -
ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் சைரன் திரைப்படத்தின் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

 

திரைத்துறையில் அண்ணன்- தம்பியாக கலக்கி வருபவர்கள் ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா. முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மோகன் ராஜா. இவர் தமிழ் திரையில் பல வெற்றிப் படங்களை இயக்கி இருக்கிறார். மோகன் ராஜா இயக்கிய ஜெயம் படத்தின் மூலம் அறிமுகம ஆனவர், நடிகர் ரவி. முதல் படமே வெற்றித்திரைப்படமாக அமைந்ததால், அவர் அன்று முதல் இன்று வரை ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார். இதைத் தொடர்ந்து பல படங்கள் மோகன் ராஜா இயக்கத்திலேயே நடித்து வந்தார். ஜெயம் ரவி குறுகிய காலத்திலேயே முதன்மை நாயகராக உருவெடுத்தார்.

கடந்த ஆண்டு ஜெயம்ரவி உள்பட பெரும் நட்சத்திர பட்டாள நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து ஜெயரம் ரவி நடிப்பில் வெளியான அகிலன், இறைவன் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்றன. இதையடுத்து, ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் சைரன். ஆண்டனி பாக்யராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் ஜெயம்ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சைரன் படத்தின் முன்னோட்டம் மற்றும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 16-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் சாட்லைட் உரிமையை விஜய் டிவியும், ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ