நயன்தாராவுக்கு மட்டும் கிடைக்கும் வாய்ப்பு.. நடிகை காஜல் அகர்வால் வேதனை…
- Advertisement -

முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் அண்மை காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இறுதியாக காஜல் அகர்வால் நடிப்பில் ‘கோஸ்டி’ எனும் திரைப்படம் வெளியானது. ஜெய், மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ஜெகன், உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான காமெடி திரைப்படமான இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

அதன் பின் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கும் ‘இந்தியன் 3’ படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியன் 2 படத்தில் அவரது காட்சிகள் இடம்பெறவில்லை என அண்மையில் இயக்குநர் ஷங்கர் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இவர் தற்போது தெலுங்கு மொழியில் தனது 60வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சசி கிரண் டிக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அகில் தேகலா என்பவர் இயக்குகிறார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய காஜல் அகர்வால், தென்னிந்திய சினிமாவில் திருமணமான நடிகைகளை ஓரங்கட்டுவதாக வேதனை தெரிவித்துள்ளார். இந்தி சினிமாவில் திருமணத்திற்கு பின்னரும், தீபிகா படுகோன், அலியா பட் போன்ற நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. தென்னிந்தியாவில் அது போன்ற வாய்ப்பு நடிகை நயன்தாராவுக்கு மட்டுமே கிடைப்பதாக அவர் கூறியிருக்கிறார்