பிரபல பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்.
பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களில் பணியாற்றியவர். அந்த வகையில் 1980 முதல் கிட்டத்தட்ட 16 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடி பெயர் பெற்றவர் ஜெயச்சந்திரன். இவருடைய பாடல்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அதன்படி இவரின் குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தான் 80 வயது உடைய ஜெயச்சந்திரன் கடந்த சில நாட்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டதன் காரணமாக கேரள மாநிலம் திருச்சூரில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 9) உயிரிழந்தார். எனவே ஜெயச்சந்திரனின் குடும்பத்தாருக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மலையாளத்திலிருந்து வந்து தெற்கு மாநிலங்களை நிரப்பிய மணிக்குரலுக்குச் சொந்தக்காரரான ஜெயச்சந்திரன் மறைந்து விட்டார் என்னும் செய்தி மனதை வருத்துகிறது.
பாடிய பாடல்களில் எல்லாம் வெற்றிகண்டு காட்டியவர். இசையாக என்றும் நம் மனங்களில் இருப்பார்.
அவருக்கு என் அஞ்சலி.
— Kamal Haasan (@ikamalhaasan) January 9, 2025
அந்த வகையில் பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஜெயச்சந்திரனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மலையாளத்திலிருந்து வந்து தெற்கு மாநிலங்களை நிரப்பிய மணிக்குரலுக்கு சொந்தக்காரரான ஜெயச்சந்திரன் மறைந்துவிட்டார் எனும் செய்தி மனதை வருத்துகிறது. அவர் பாடிய பாடல்களில் எல்லாம் வெற்றி கண்டு காட்டியவர். அவர் இசையாக என்றும் நம் மனங்களில் இருப்பார். அவருக்கு என் அஞ்சலி” என்று குறிப்பிட்டுள்ளார்.