நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக கார்த்தி நடிப்பில் ஜப்பான் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அதே சமயம் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை முழுவதும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. பின்னர் 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து அரவிந்தசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே ஆகியோரும் நடித்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்திற்கு மெய்யழகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.