spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா‘மஞ்சுமல் பாய்ஸ்’ ஆஸ்கருக்கு தகுதியான படம்... இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் புகழாரம்...

‘மஞ்சுமல் பாய்ஸ்’ ஆஸ்கருக்கு தகுதியான படம்… இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் புகழாரம்…

-

- Advertisement -
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மலையாள மொழியில் உருவான மஞ்சுமல் பாய்ஸ் படம் திரையரங்குகளில் வெளியானது. சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கேரளாவின் வெற்றியை தொடர்ந்து இந்த படம் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுக்க வெளியிடப்பட்டது.மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் திரைப்படத்திற்கும், படக்குழுவுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், நடிகைகள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர். கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம், அடுத்து, தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குவதாகவும் கூறப்படுகிறது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று, வசூல் வேட்டை நடத்தியது. இத்திரைப்படம் இதுவரை சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதனிடையே படத்தில் அனுமதியின்றி கண்மணி பாடலை பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து, பல சர்ச்சைகளும் எழுந்தன. இந்நிலையில், இத்திரைப்படத்தை பார்த்த பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், ஆஸ்கர் விருதுக்கு தகுதியான திரைப்படம் என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் இயக்குநர் சிதம்பரம் உள்பட படக்குழுவுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ