Homeசெய்திகள்சினிமாநடிகைகள் தனித்து வாழ்ந்தால் வதந்தி கிளம்புகிறது... நடிகை மீனா ஆதங்கம்...

நடிகைகள் தனித்து வாழ்ந்தால் வதந்தி கிளம்புகிறது… நடிகை மீனா ஆதங்கம்…

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தடம் பதித்தவர் நடிகை மீனா. ரஜினி உள்பட பலருடன் இணைந்து அவர் சிறு வயதிலேயே பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். 80-களில் தொடங்கிய அவரது பயணம் திரைத்துறையில் இன்று வரை சென்று கொண்டிருக்கிறது. ரஜினி, கமல்ஹாசன், அஜித்குமார் இப்படி அனைத்து முன்னணி நடிகர்களுடன் அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் பல படங்கள் மாபெரும் ஹிட் அடித்துள்ளன. முன்னணி கதாநாயகியாக உயர்ந்த நடிகை மீனா, கடந்த 2009-ம் ஆண்டு வித்யா சேகர் என்பவரை திருமணம் செய்து தொண்டார். இவருக்கு நைனிகா எனும் மகள் உள்ளார். இவர் விஜய் நடித்த தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர், நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். கடந்த ஆண்டு அவர் மரணம் அடைந்தார். இந்த துக்கத்தில் இருந்து நடிகை மீனா கடந்து வந்துள்ளார். இதனிடையே, அண்மைக் காலமாக நடிகை மீனா மறுமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு மீனா மறுப்பு தெவித்த போதிலும், இந்த வதந்தி தொடர்துகொண்டே இருக்கிறது.

இதுகுறித்து பேசிய மீனா, நான் மறுமணம் செய்வதாக பல வதந்திகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஹீரோயின் மட்டும் இல்லை, பொதுவாக பெண்கள் இது போன்ற வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். ஹீரோ தனியாக இருந்தால் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், ஹீரோயின் தனியாக வாழ்ந்து வந்தால் இது போல பல பிரச்சனைகள் அவரை பின்தொடர்கின்றன. இது என்னையும் என் குடும்பத்தினரையும் கடுமையாக பாதிக்கிறது என ஆதங்கமாக பேசியிருந்தார்.

MUST READ