டோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வரும் வரும் நடிகர் நாகர்ஜூனாவின் மகன் தான் நாக சைதன்யா. இவரும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் தமிழில் இறுதியாக கஸ்டடி திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி இருந்தார். இதனிடையே, நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து கடந்த 2017 இல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு 4 ஆண்டுகள் கழித்து தங்களின் திருமண வாழ்க்கை முடிந்து விட்டதாக அறிவித்து விவாகரத்தும் பெற்றுக் கொண்டனர். அதை தொடர்ந்து சமந்தா ஒரு பக்கமும் நாக சைதன்யா ஒரு பக்கமும் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.
அதே சமயம், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, நாக சைதன்யாவும் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்த சோபிதா துளி பாலாவும் காதலித்து வருவதாக பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. மேலும், நடிகை சமந்தாவும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், அதற்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார் சமந்தா.
இந்நிலையில், நடிகர் நாக சைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம் செய்ய அவரது தந்தையும், நடிகருமான நாகர்ஜூனா முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. தனது சொந்தத்திலேயே தனது மகனுக்கு பெண் பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.