Homeசெய்திகள்சினிமாமரங்களின் நாயகன் பத்மஸ்ரீ விவேக் நினைவு தினம் இன்று!

மரங்களின் நாயகன் பத்மஸ்ரீ விவேக் நினைவு தினம் இன்று!

-

- Advertisement -

நடிகர் விவேக்கின் மூன்றாவது நினைவு தினம் இன்று. மரங்களின் நாயகன் பத்மஸ்ரீ விவேக் நினைவு தினம் இன்று!

நடிகர் விவேக் தனது நகைச்சுவையால் ரசிகர்கள் பலரையும் சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைத்தவர். இவர் மறைந்து மூன்று ஆண்டுகளானாலும் ஜனங்களின் கலைஞனாக மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். இவருடைய கனவு உலகத்தில் ஒரு கோடி மரங்களை நடுவது தான். ஆனால் இவர் உயிருடன் இருக்கும் வரை கிட்டத்தட்ட 33 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேலான மரங்களை நட்டு மரங்களின் நாயகனாக வாழ்ந்து வருகிறார். இவர் மரம் நடுதல் மட்டுமல்லாமல் குளம் ஏரி போன்றவற்றை தூர்வாருதல், ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவுதல் என எண்ணற்ற பல நன்மைகளை செய்த உன்னத மனிதனும் ஆவார்.மரங்களின் நாயகன் பத்மஸ்ரீ விவேக் நினைவு தினம் இன்று!

திரை உலகில் இவர் கிட்டதட்ட 220க்கும் மேலான படங்களை நடித்தவர். அந்த வகையில் இவர் காமெடி நடிகராகவும் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். குறிப்பாக காமெடியனாக இவர் பெண், சிசுக்கொலை, மூடநம்பிக்கை, ஊழல், சாதி, அரசியல் என அனைத்தையும் எடுத்துக் பூரி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். அது மட்டும் இல்லாமல் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் சீடனாகவும் இருந்தவர். அவரின் பெயரில்தான் திட்டம் ஒன்றைத் தொடங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இவ்வாறு விவேக் தான் நட்டு வைத்த ஒவ்வொரு மரங்களிலும் வாழ்ந்து வருகிறார் என்பதில் சந்தேகமே இல்லை. மரங்களின் நாயகன் பத்மஸ்ரீ விவேக் நினைவு தினம் இன்று!இவர் கடந்த 2021 இல் மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழந்த சம்பவம் இன்றுவரையிலும் ரசிகர்களை மீள முடியா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ஊர் போற்றும் சின்ன கலைவாணராக வாழ்ந்து மறைந்த விவேக்கின் மூன்றாவது நினைவு தினமான இன்று அவருடைய நினைவுகளையும் புகழையும் எண்ணி அவரை போற்றி புகழ்வோமாக!

MUST READ