spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவலியை எதிர்த்து போராடி வருவேன்… விபத்து குறித்து தானே மனம் திறந்த பிரித்விராஜ்!

வலியை எதிர்த்து போராடி வருவேன்… விபத்து குறித்து தானே மனம் திறந்த பிரித்விராஜ்!

-

- Advertisement -

நடிகர் பிரித்விராஜ் தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்த மனம் திறந்துள்ளார்.

பிருத்விராஜ் ‘விளையத் புத்தா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர்கள் அனு மோகன் மற்றும் ப்ரியம்வதா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

we-r-hiring

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மறையூரில் நடைபெற்று வந்தது. அப்போது சண்டைக் காட்சியின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது பிரித்விராஜ் விபத்துக்கு ஆளானார்.

அதையடுத்து அவர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. விபத்தைத் தொடர்ந்து, நடிகர் குணமடையும் வரை விளையத் புத்தா படப்பிடிப்பு இடைநிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. பிருத்விராஜ் வேலைக்குத் திரும்ப இரண்டு மாதங்கள் ஆகும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் பிருத்விராஜ் இதுகுறித்து அவரே மனம் திறந்துள்ளார்.

“வணக்கம்… ஆமாம்… விளையத் புத்தா படத்தின் ஆக்‌ஷன் காட்சியை படமாக்கும் போது எனக்கு விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, நான் ஒரு திறமையான அறுவை சிகிச்சை நிபுணர்களின் மூலம் சிகிச்சை செய்யப்பட்டேன். இப்போது நான் உடல்நலம் தேறி வருகிறேன். இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஓய்வு மற்றும் பிசியோதெரபி தான்.

அந்த நேரத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன், மேலும் முழுமையாக குணமடையவும், விரைவில் படப்பிடிப்பில் இணையவும் வலியை எதிர்த்துப் போராடுவேன் என்று உறுதியளிக்கிறேன். தொடர்பு கொண்டு அக்கறையையும் அன்பையும் வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்

MUST READ