எனக்கு அழுது நடிக்க மிகவும் விருப்பம் – நடிகை பிரியங்கா மோகன்
- Advertisement -

தெலுங்கில் அறிமுகமாகி தமிழ் மொழியில் இன்று கொடி கட்டி பறப்பவர் நடிகை பிரியங்கா மோகன். அறிமுகமான திரைப்படம் தெலுங்காக இருப்பினும், தற்போது அடுத்தடுத்து தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். தெலுங்கில் கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தின் மூலம் அவர் பிரபலமானார். நானியுடன் சேர்ந்து அவர் நடித்த அத்திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பெயர் பெற்றார்.

இதையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இரண்டு திரைப்படங்களின் மூலமும் ரசிகர்களை கவர்ந்தவர் பிரியங்கா மோகன். தற்போது தனுஷூடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். பொங்கலை முன்னிட்டு அவரும் ஜனவரி 12-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வௌியாகிறது.

இந்நிலையில், ஒவ்வொரு படத்தின் தொடக்கத்திலும் நான் பதற்றமாக இருப்பேன் என அவர் கூறியுள்ளார். மேலும், படத்தில் முக்கியமான, அழுத்தமான காட்சிகளில் அழுது நடிக்க பிடிக்கும். நான் அழுவதை திரையில் காண எனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.