spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'வேட்டையன்' படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் ரஜினி!

‘வேட்டையன்’ படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் ரஜினி!

-

- Advertisement -

நடிகர் ரஜினி நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு நடித்து வரும் திரைப்படம் தான் வேட்டையன். 'வேட்டையன்' படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் ரஜினி!ரஜினியின் 170 வது படமாக உருவாகி வரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கி வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதில் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், பகத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பை கலந்த சில தினங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு திருவனந்தபுரம், சென்னை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. 'வேட்டையன்' படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் ரஜினி!அடுத்ததாக இதன் படபிடிப்பு மும்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற இருக்கிறது. அதற்காக நடிகர் ரஜினி சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போதைய இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றனர். அந்த வீடியோவை கண்ட ரசிகர்கள், ரஜினி அதே ஸ்டைலுடன் அதே நடையில் செல்கிறார் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது.

அதேசமயம் படப்பிடிப்பு முழுவதும் மே மாத இறுதிக்குள் முடிவடைந்து விடும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டும் இல்லாமல் இருந்த படமானது அக்டோபர் மாதத்தில் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ