Homeசெய்திகள்சினிமாதுபாய் கிருஷ்ணர் கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

துபாய் கிருஷ்ணர் கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

-

துபாயில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது திரைப்படம் வேட்டையன் ஆகும். இத்திரைப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கி புகழ்பெற்ற ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் படத்திற்கு இசை அமைக்கிறார். வேட்டையன் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இத்திரைப்பத்தின் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஓய்வெடுக்க துபாய் புறப்பட்டுச் சென்றார். அங்கு சில நாட்களுக்கு தங்கிய அவர், லுலு குழுமத் தலைவரை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் அபுதாபி சென்ற ரஜினிகாந்த் அங்கு உள்ள கிருஷ்ணர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சுமார் 800 கோடி ரூபாய் செலவில் 7 கோபுரத்துடன் 5 ஏக்கர் பரப்பளவில் இந்த கோயில் கட்டப்பட்டது. வெள்ளை சலவைக் கற்களால் கட்டப்பட்ட இந்த கோயிலை கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்க உள்ளார்.

MUST READ