நடிகர் ராம் பொத்தினேனி மீண்டும் பூரி ஜெகநாத்துடன் கூட்டணி அமைத்துள்ளார்.
தெலுங்கில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பூரி ஜெகன்நாத். மாஸ் கமர்சியல் என்டர்டைன்மென்ட் திரைப்படங்கள் இயக்குவதில் இவர் கை தேர்ந்தவர். இவர் கடைசியாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘லைகர்’ படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் படு தோல்வி அடைந்தது.

இந்நிலையில் பூரி ஜெகநாத் நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார். ஏற்கனவே ராம் பொத்தினேனி மற்றும் பூரி கூட்டணியில் ஐ ஸ்மார்ட் ஷங்கர் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படம் இரண்டாம் பாகமாக தற்போது புதிய படம் உருவாகிறது. இப்படத்திற்கு டபுள் ஐஸ்மார்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் பூரியே தயாரிக்கவும் செய்கிறார். முந்தைய பாகத்தை விட இந்தப் பாகம் அதிக பெட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம். படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.