நடிகை ரித்திகா சிங் வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.நடிகை ரித்திகா சிங் கடந்த 2016 ஆம் ஆண்டு சுதா கொங்கரா மாதவன் கூட்டணியில் வெளியான இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
அதைத் தொடர்ந்து இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, கொலை போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஜெய் பீம் படம் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கி வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், ஐதராபாத், மும்பை போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது படத்தின் பின்னணி வேலைகளும் டப்பிங் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அதன்படி ஏற்கனவே பகத் பாசில், துஷாரா விஜயன் ஆகியோர் தங்களின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து நடிகை ரித்திகா சிங் தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் வேட்டையன் திரைப்படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -