Homeசெய்திகள்சினிமாஜனவரியைக் குறி வைக்கும் 'சலார்'... பிரம்மாண்ட தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

ஜனவரியைக் குறி வைக்கும் ‘சலார்’… பிரம்மாண்ட தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

-

- Advertisement -

ஜனவரியைக் குறி வைக்கும் 'சலார்'... பிரம்மாண்ட தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!பாகுபலி 1,2 படங்களின் மூலம் இந்திய அளவில் பெரிய ஸ்டார் அந்தஸ்தை பெற்ற நடிகர் பிரபாஸ். ஆனால் அதன் பிறகு வந்த படங்கள் அனைத்தும் விமர்சகர்கள் மத்தியில் எதிர்மறையான வரவேற்பைப் பெற்றன. நிச்சயம் இந்திய அளவில் பேசப்படும் ஒரு படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த பிரபாஸ், பிரசாந்த் நீலுடன் “சலார்” படத்திற்காக கை கோர்த்தார். ஏற்கனவே கே.ஜி.எஃப் படங்களின் வெற்றியினால் உச்சத்தில் இருந்த இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ் உடன் இணைவதால் ஒரு தரமான படமாக சலார் திரைப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளியான பின்பு வந்த ரிசல்ட் சற்று அதிர்ச்சியைத் தான் அளித்தது. படத்தில் புதிதாக ஒன்றுமே இல்லை பழைய டெம்பிளேட் கதையைத் தான் மீண்டும் சுட்டு வைத்துள்ளார்கள் என்றெல்லாம் ரசிகர்கள் கழுவி ஊற்றினார்கள். டிசம்பர் 22 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் பிரபாஸுக்கு இருந்த மார்க்கெட்டின் காரணமாக முதல் வாரத்திலேயே 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மற்ற மாநிலங்களில் இப்படத்திற்கான வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. எதிர்மறை விமர்சனங்களால் ஆயிரம் கோடியை தொட படம் திணறி வருகிறது. இந்நிலையில் தான் இப்படம் வரும் பொங்கல் ஸ்பெஷலாக பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ்-ல் வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஜனவரியைக் குறி வைக்கும் 'சலார்'... பிரம்மாண்ட தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!குறிப்பாக ஜனவரி 12 அன்று இப்படம் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. ரிலீஸ் ஆகி ஒரு மாதத்தை கூட முழுமையாக நிறைவு செய்வதற்கு முன்பே படம் ஓடிடி தளத்தில் வெளிவரப் போகும் தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 160 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பொங்கல் தினமானது ஆந்திராவில் சங்கராந்தி என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. எனவே அங்கு பல பெரிய ஸ்டார்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என்பதாலும் பிற மொழிகளிலும் பொங்கல் ஸ்பெஷலாக புதிய படங்கள் வெளியாவதால் சிலர் திரைப்படத்திற்கான காட்சிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது எனவும் கூறப்படுகிறது. இதனால்தான் நெட்ஃப்ளிக்ஸ்-ல் நல்ல தொகைக்கு இந்த படத்தை இவ்வளவு சீக்கிரமாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

MUST READ