கூலி திரைப்படத்தில் இணையும் சத்யராஜ்… படக்குழுவுக்கு போட்ட நிபந்தனை…
- Advertisement -

ரஜினிகாந்த் தற்போது 170-வது திரைப்படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. ஜெய் பீம் பட புகழ் ஞானவேல் இப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் முழுவீச்சில்நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சனின் புகைப்படங்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றன.

இப்படத்தைத் தொடர்ந்து 171-வது திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து ரஜினி பணியாற்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு அனிருச் இசை அமைக்கிறார். அண்மையில் இப்படத்திற்கு கூலி என்று தலைப்பு வைத்து, அத்துடன் டைட்டில் டீசரையும் படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக படக்குழு சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். ஆனால், படத்தில் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் இருக்க வேண்டும் என நடிகர் சத்யராஜ், படக்குழுவுக்கு நிபந்தனை விதித்துள்ளாராம். மேலும், ஊதியத்தையும் உயர்த்தி தர வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.