கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் , சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். சில நிமிடங்களே இவரின் காட்சிகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தமிழில் தனுஷ் உடன் இணைந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் துல்கர் சல்மான் தற்போது பான் இந்தியா ஹீரோவாக உருவெடுத்துள்ளார். அந்த வகையில் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். காந்தா, லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் சிவராஜ்குமார் மற்றும் துல்கர் சல்மான் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான ஈட்டி திரைப்படத்தின் இயக்குனர் ரவி அரசு சிவராஜ்குமார் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். அதில் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் வருகின்ற நவம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.