சிம்பு ரசிகர்களுக்கான அதிரடி அறிவிப்பு… எஸ்டிஆர்48 அப்டேட் இதோ…
- Advertisement -
கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் 48-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்பை படக்குழு பகிர்ந்துள்ளது.

தமிழ் திரையுலகம் வளர வளர அதன் கைபிடித்து வளர்ந்த நாயகன் சிம்பு எனும் சிலம்பரசன். கோலிவுட்டின் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அன்று முதல் இன்று வரை கொண்டாடப்படுகிறார் சிம்பு. சிறு வயதில் தந்தையுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை வேடத்தில் நடித்திருப்பார். அப்போது முதலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இதைத் தொடர்ந்து காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் நடித்து அவர் நாயகனாக அறிமுகம் ஆனார். இப்படத்தை அவரது தந்தை டி ராஜேந்தர் இயக்கியிருந்தார்

முதல் படத்திலேயே மக்கள் மனதில் முத்திரை பதித்த சிம்பு அடுத்தடுத்து காதல், காமெடி, கமர்ஷியல், ஆக்ஷன் என பல பரிமாணங்களில் நடித்து கோலிவுட்டில் தனக்கென தனி கூட்டத்தை உருவாக்கினார். கடந்த சில ஆண்டுகளாக சிம்பு நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியைத் தழுவின. தொடர்ந்து பல விமர்சனங்களுக்கும் ஆளாகினார் சிம்பு. உடல் பருமன், படப்பிடிப்பு தாமதம் என பல சிக்கல்களை கடந்து ஈஸ்வரன் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்களை தொடங்கினார்.

அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தன. தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இத்திரைப்படம் சிம்பு நடிக்கும் 48-வது படமாகும். இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையிலும், படப்பிடிப்பு தொடர்பான எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், வரும் பிப்ரவரி 2-ம் தேதி இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் கிளிம்ப்ஸ் காணொலி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.