அரண்மனை படத்தின் 1,2 ,3 ஆகிய மூன்று பாகங்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இயக்குனர் சுந்தர் சி தற்போது ‘அரண்மனை 4’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
மேலும் இவர் இயக்கிய அரண்மனையின் மூன்று பாகங்களும் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது. நகைச்சுவை கலந்த இந்த திகில் திரைப்படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. மேலும் இந்த மூன்று பாகங்களுமே ஒன்றுக்கொன்று தொடர்ச்சியாக இல்லாமல் வெவ்வேறு கதைகளில் உருவாகி இருந்தது.
இதைத் தொடர்ந்து, சுந்தர் சி தற்போது ‘அரண்மனை 4’ படத்தை இயக்கி வருகிறார் .
இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்த விஜய் சேதுபதி சில காரணங்களினால் இப்படத்தில் இருந்து விலகிய நிலையில் சுந்தர் சியே இந்தப் படத்தில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.
இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, பாக்கியராஜ் வடிவேலு, மீனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தமன்னாவிற்கு ஜோடியாக சந்தோஷ் பிரதாப் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
திரை உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான சந்தோஷ் பிரதாப், ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த ‘சார்பட்டா பரம்பரை’ படத்திலும், அருள் நிதியின் நடிப்பில் வெளிவந்த ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் இவர் மிஸ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.