spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகாவலர் தேர்வு எழுதும் சன்னி லியோன்? புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை...

காவலர் தேர்வு எழுதும் சன்னி லியோன்? புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை…

-

- Advertisement -
பாலிவுட்டில் தொடக்கத்தில் ஆபாச காட்சிகளில் நடித்து சர்ச்சைகளுக்கு ஆளானவர் நடிகை சன்னி லியோன். இதைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டில் நல்ல திரைக்கதை கொண்ட திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உருவெடுத்த அவர், 2014-ம் ஆண்டு ஜெய் நடித்த வடகறி படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகம் ஆகினார். பாலிவுட் நடிகையாக இருந்தாலும் அவருக்கு தமிழில் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். வடகறி படத்திற்கு பிறகு மம்மூட்டி நடித்த மதுரராஜா மற்றும் ஓ மை கோஸ்ட், தீ இவன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இது தவிர இந்தி மற்றும் தமிழ் மொழியிலும் அவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்களின் மனதை வென்ற நடிகை சன்னி லியோன் தற்போது தொழில் அதிபராக அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா நகரில் அவர் புதிய உணவகம் ஒன்றை திறந்துள்ளார்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச காவலர் தேர்வு அனுமதி சீட்டில், நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதைக் கண்ட அரசியல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், அது போலி அனுமதி சீட்டு என்பது தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ