Homeசெய்திகள்சினிமாமீண்டும் தொடங்குகிறது விக்ரமின் தங்கலான் படப்பிடிப்பு!

மீண்டும் தொடங்குகிறது விக்ரமின் தங்கலான் படப்பிடிப்பு!

-

விக்ரம் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு ‘தங்கலான்‘ எனும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்குகிறார். இப்படத்தில் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார்.

மேலும் இப்படம் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.
இந்தப் படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு கேஜிஎப் இல் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தற்போது இப்படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது.

இதற்கிடையில் படப்பிடிப்பின் போது விக்ரமுக்கு விபத்து ஏற்பட்டது என்றும் அந்த விபத்தில் விலா எலும்பு முறிந்ததாகவும் கூறப்பட்டது. அதன் பின் ஓய்வில் இருந்த விக்ரம் தற்போது உடல்நிலை தேறி படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார். எனவே ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூன் 15ஆம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ