spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி- ஆறுமுக குமார் கூட்டணியின் புதிய பட அப்டேட்!

விஜய் சேதுபதி- ஆறுமுக குமார் கூட்டணியின் புதிய பட அப்டேட்!

-

- Advertisement -

விஜய் சேதுபதி ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்திற்கு பிறகு பி ஆறுமுக குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ எனும் திரைப்படத்தை இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கியிருந்தார்.

we-r-hiring

தற்போது இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
தலைப்பிடப்படாத இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, பி எஸ் அவினாஷ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை 7சி’ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

MUST READ