spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாநவம்பர் 1, 2-ம் தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

நவம்பர் 1, 2-ம் தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

-

- Advertisement -

தமிழகத்தில் வரும் நவம்பர் 1, 2-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறதாகவும், இதன் காரணமாக நவம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது.

we-r-hiring

அதன்படி, வரும் நவம்பர் 1-ம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி,  தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கரூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதேபோல், நவம்பர் 2ஆம் தேதி தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

MUST READ