
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த நட்சத்திரங்களான சாக்ஷி மாலிக், தினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் கடந்த ஏப்ரல் மாதம் 23- ஆம் தேதி அன்று டெல்லியில் போராட்டத்தில் குதித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் வருகை!
அவர்களுக்கு ஆதரவாக முன்னணி மல்யுத்த வீரர்களும், விவசாயிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதுப் போன்ற சூழலில், புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்ட நாளன்று, அதனை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மற்றும் விவசாயிகள் கைது செய்யப்பட்டு பல்வேறு காவல் நிலையங்களில் வைக்கப்பட்டன. பின்னர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இனி போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, பல்வேறு போட்டிகளில் தாங்கள் வென்ற பதக்கங்களை, ஹரித்வார் பகுதியில் கங்கை நதியில் வீசப் போவதாக மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்திருந்தனர். அதன்படி, சாக்ஷி மாலிக், தினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஏராளமானோர் ஹரித்துவாரில் கங்கை நதியோரம் குவிந்தனர்.
ஒலிம்பிக் உள்பட பல்வேறு போட்டிகளில் வென்ற பதக்கங்களை அவர்கள் எடுத்து வந்திருந்தனர். இதுப்போன்ற சூழலில், அங்கு விவசாய சங்கத்தலைவர்கள், மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் சமரசம் செய்து அவர்களது பதக்கங்களை கங்கை நதியில் வீச விடாமல் தடுத்து, அவற்றை வாங்கிக் கொண்டனர்.
ஜூன் 15- ல் தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்!
மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்சனைக்கு தீர்வுக்காண ஐந்து நாட்கள் அவகாசம் தருமாறு மல்யுத்த வீராங்கனைகளிடம் பாரதிய கிஷான் விவசாய சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி கேட்டு கொண்டார். இதையடுத்து, வீரர், வீராங்கனைகள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.