பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு ஜூன் 27க்கு ஒத்திவைப்பு
மத்திய சென்னை திமுக எம்.பி.தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி திமுக எம்.பி.தயாநிதிமாறன் தொகுதி நிதியை 75 விழுக்காடு பயன்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார்.
அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தயாநிதி மாறன் தன் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட 17 கோடி ரூபாய் நிதியை 95 விழுக்காட்டிற்கும் மேல் பயன்படுத்தி விட்டதாகவும் மீதி இருப்பது 17 லட்சம் மட்டுமே என்றும் விளக்கம் அளித்தார்.
#WATCH | Tamil Nadu: AIADMK General Secretary Edappadi K. Palaniswami reaches Chennai Egmore Metropolitan Magistrate Court to appear before the court in connection with a defamation case filed by DMK MP and Central Chennai Parliament Constituency candidate Dhayanidhi Maaran. pic.twitter.com/TPKRSapVTt
— ANI (@ANI) May 14, 2024
இது தொடர்பாக பழனிச்சாமிக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் மன்னிப்பு கேட்காத நிலையில் தயாநிதி மாறன் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/selvaperunthagai-statement-9/84461
அந்த வழக்கின் விசாரணைக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் பழனிசாமி நேரில் ஆஜரானார். எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 27 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.