Homeசெய்திகள்அரசியல்செப்.3ல் இருந்து ஓபிஎஸ் சுற்றுப்பயணம் - பண்ருட்டி ராமச்சந்திரன்

செப்.3ல் இருந்து ஓபிஎஸ் சுற்றுப்பயணம் – பண்ருட்டி ராமச்சந்திரன்

-

செப்.3ல் இருந்து ஓபிஎஸ் சுற்றுப்பயணம் – பண்ருட்டி ராமச்சந்திரன்

ஓ. பன்னீர்செல்வம் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Image

சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ ஹாலில் ஓ.பி.எஸ் -அணியின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்,அவரின் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம்,ஜேசிடி பிரபாகரன்,சட்டமன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன்,வைத்தி லிங்கம்,ஐயப்பன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய ஒ.பன்னீர்செல்வம், “நாடாளுமன்ற தேர்தல் பணிகளை எந்த கட்சி தொடங்குகிறதோ, தொடங்கவில்லையோ அது நமக்கு தேவை இல்லை. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து நாம் வேலையை நாம் செய்ய வேண்டும், யாருக்காகவும் நாம் காத்திருக்க கூடாது. இரு தரப்பும் ஒன்று சேர்ந்தால் கட்சி ஒற்றுப்போகும். ஆனால் அவர்கள் சமாதானத்திற்கு ஒத்துப் போக மாட்டார்கள். நாங்களும் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

பொதுச்செயலாளர் என்பது தேர்தல் கமிஷன் தான் முடிவு எடுக்க வேண்டும். பொதுச் செயலாளர் பதவி யாருக்கு என்று இன்னும் நிலுவையில் தான் உள்ளது. இரட்டை இலை இருவருக்கும் பொதுவாக தான் உள்ளது. இன்னும் இரட்டை இலை ஒருவருக்கு தான் என்று முடிவு செய்யவில்லை, அதை நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும். ஓ. பன்னீர்செல்வம் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இந்த சுற்று பயணம் ஒவ்வொரு வருவாய் மாவட்டமாக சென்று கட்சியின் தொண்டர்களை நேரில் சந்திக்க உள்ளார். அதிமுகவுக்கு ஆணிவேராக இருந்த அண்ணா பிறந்த காஞ்சிபுரத்திலிருந்து சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார்” என்றார்.

MUST READ