spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஇரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி கோவை அணி அசத்தல்!

இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி கோவை அணி அசத்தல்!

-

- Advertisement -

 

இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி கோவை அணி அசத்தல்!
Photo: TNPL

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நெல்லை அணியை வீழ்த்தி கோவை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.

we-r-hiring

இரண்டு நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!

ஏழாவது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, நெல்லை மாவட்டம், சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஜூலை 12) இரவு 07.15 மணிக்கு நடைபெற்றது. டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இறுதிப் போட்டியில் கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை குவித்தது. இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி, தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடியது. கோவை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களுக்கு சுருண்டது.

15,000 கையடக்கக் கணினிகளை வாங்குவதற்கான டெண்டர் வெளியீடு!

இதனால் நெல்லை அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது. சாம்பியன் பட்டத்தை வென்ற கோவை கிங்ஸ் அணிக்கு ரூபாய் 50 லட்சமும், இரண்டாவது இடத்தைப் பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு ரூபாய் 30 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

MUST READ