spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 470 ஏக்கர் பரப்பில் அமையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் குழுமம், ரூ.9,000 கோடியில் கார் தயாரிப்பு ஆலையை நிறுவ கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் கார் தயாரிப்பு ஆலை அமைக்கப்பட உள்ளது. சுமார் 470 ஏக்கர் பரப்பில் அமையும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை  தொடங்கி வைத்தார்.

we-r-hiring

இந்த கார் உற்பத்தி ஆலை மூலம் 5,000 பேர் நேரடியாகவும், 15,000 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறவுள்ளனர். சிப்காட் வளாகத்தில் 470 ஏக்கர் பரப்பளவில் ஆலையை அமைக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஆண்டிற்கு 2 லட்சம் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

MUST READ